மறுகால்குறிச்சி அரசு பள்ளி ஆண்டு விழா

நெல்லை, பிப்.23: நெல்லை மாவட்டம் மறுகால்குறிச்சி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எஸ். சுடலைக்கண்ணு தலைமை வகித்து விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் பள்ளி உபயோகத்திற்கு பீரோ பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நாங்குநேரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா, வட்டார கல்வி அலுவலர்கள், மறுகால்குறிச்சி ஊராட்சி தலைவி சாந்தகுமாரி செல்லையா, துணைத்தலைவர் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் புஷ்பபாண்டி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் வானமாமலை என்ற ராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வானமாமலை, கிளை செயலாளர் கண்ணன், திமுக பிரதிநிதி பரமசிவம், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post மறுகால்குறிச்சி அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: