ஜே.இ.இ.முதன்மைத்தேர்வில் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை

நெல்லை: பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜே.இ.இ. முதன்மைத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இப்பள்ளியில் மொத்தம் 159 மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் அகில இந்திய தரவரிசையில் தமிழ்நாட்டில் முகுந்த் பிரதீஷ் முதல் மதிப்பெண்ணையும், அவினாஷ் இயற்பியலில் 100 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளியில் இரண்டாவதாகவும், மோனிக்காராம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். ஜேசன் சந்த்ராஜ்சிங், பிரஷித்தா, ஜெய் அபிஷேக், ஸ்ரீ சரண் ராகவ், ஹர்சித்தா, பர்ஹின் ஆகிய மாணவர்கள் 98 சதவீதமும், 95 சதவீதத்திற்கு மேல் 29 மாணவர்களும், 90 சதவீதத்திற்கு மேல் 53 மாணவர்களும், 80 சதவீதத்திற்கு மேல் 84 மாணவர்களும் பெற்றுள்ளனர். முதல் முயற்சியிலேயே சாதனை புரிந்த இம்மாணவர்களை பள்ளியின் முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஜே.இ.இ.முதன்மைத்தேர்வில் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: