காரைக்காலில் மேகதாது அணை கட்டும் தீர்மான நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்

 

காரைக்கால்,மே 22: மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு ஆதரவாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்தும் தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் காரைக்காலில் நேற்று புதிய பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை ஆணையத்தால் மேகதாது அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post காரைக்காலில் மேகதாது அணை கட்டும் தீர்மான நகலை எரித்து விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: