சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம் கலைஞர்கள், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் ஆகியோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட, மாநில அளவிலான விருது ஏற்கனவே பெற்றவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கக்கூடாது. விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுயவிவர குறிப்பு, நிழற்படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச் சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம்- 631 502 என்ற முகவரிக்கு வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களை 044-27269148 என்ற எண்ணில் பெறலாம்.
The post கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் மாவட்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.