பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கணேசம்மாள் பாப்பாக்குடி போலீசில் நிபந்தனையின் பேரில் கையெழுத்து போட்டு வந்தார். கடந்த 12.11.2017 அன்று கணேசம்மாள் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு அடைச்சாணியில் தெருவில் நடந்து வந்த போது அவரை வழிமறித்த முருகன், அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
The post மனைவியை வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.