குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

 

பந்தலூர், பிப்.16: பந்தலூர் அருகே அம்பலமூலா தோட்டபுரா சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை ஊராட்சி அம்பலமூலா முதல் தோட்டபுரா மற்றும் தேனம்பாடி, ஆதிவாசி மருத்துவமனை ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள மண் சாலை கடந்த 40 வருடங்களாக சீரமைக்காமல் இருந்து வருகிறது. இதனால், பள்ளி குழந்தைகள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ், ஆட்டோ, ஜீப் என எந்தவித வாகனங்களும் சென்று வர முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றன.  சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைந்து தார் சாலையாக அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: