ஊட்டி, மார்ச் 16: தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர். அவர்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தொடர்ந்து உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லவ்டேல் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். மேலும் நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதால், எல்லையோர பகுதிகளில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
