தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் மகள் திருமண வரவேற்பு: முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமாரின் மகள் திவ்யா-ரஞ்சித்குமார், திருமணம் இன்று காலை சென்னை ஆர்.கே கன்வென்க்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் அமைச்சர்கள் எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், ரகுபதி, கீதா ஜுவன், ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், காங்கிரஸ் தொழிலாளர்கள் சங்கம் தலைவர் ஜெ.ரகுநாதன், பொருளாளர் எஸ்.ஜெகதீசன், என்.சுந்தர்ராஜ், சமூக சத்ரியர் பேரவை மாநில இணை பொது செயலாளர் எஸ்.எம்.குமார், தொகுதி தலைவர் லயன் சீனு மற்றும் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு, சமூகநீதி சத்திரியர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவிற்கு வந்தவர்களை பொன்கு மார், மைதிலி பொன்குமார், கே.வினோத்குமார், ரேவதி வினோத் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

The post தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் மகள் திருமண வரவேற்பு: முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: