அதன் மூலம் அவரது அரசு தப்பியது. இந்நிலையில், நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க, தனக்கு ரூ.10 கோடி பேரம் பேசியதாக ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சுதன்ஷு சேகர் புகார் அளித்துள்ளார். “நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு வாக்களிக்கும்படி எங்கள் கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் குமார், எங்கள் கட்சியில் உள்ள மற்ற எம்எல்ஏக்களிடம் பேரம் பேசினார். எனக்கு ரூ.10 கோடி அல்லது அமைச்சர் பதவி தருவதாகவும் அந்த பேரம் நடந்தது. இது தொடர்பாக பொறியாளர் சுனில் என்னை கடந்த 10ம் தேதி தொடர்பு கொண்டு, முதல்கட்டமாக ரூ.5 கோடியும், வாக்கெடுப்பு முடிந்த பிறகு ரூ.5 கோடியும் தருவதாக கூறினார். வாக்கெடுப்பில் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பிமா பார்தி, திலீப் ராய் கடத்தப்பட்டனர். இதில் சஞ்சீவ் குமார், சுனில் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
The post பீகாரில் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம்: போலீசில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ பகீர் புகார் appeared first on Dinakaran.