இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரஜ்வல் ரேவண்ணா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இன்டர்போல் போலீசார் உதவியை நாம் நாடியுள்ளோம். ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால் எந்த நாட்டில் பிரஜ்வல் ரேவண்ணா இருந்தாலும் அது பற்றிய தகவல் நமது நாட்டிற்கு கிடைத்துவிடும். பிரஜ்வல் கண்டுபிடிக்கப்பட்டால் , உடனே நமது அதிகாரிகள் விரைந்து சென்று அவரை கைது செய்து இந்தியா அழைத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை எம்பி பிரஜ்வல் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை., என்றார்.
The post பிரஜ்வல் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: கர்நாடக அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.