இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் தனது டிவிட்டர் பதிவில், கேரளாவில் ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். தற்போது கார்கே வந்த ஹெலிகாப்டரையும் இதே போன்று சோதனை செய்துள்ளனர். போலீசார் வெளியே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிப்பில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதே போன்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் ஹெலிகாப்டர்கள், வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. ஆளும் கட்சியினர் வாகனங்கள் சுதந்திரமாக இயங்க அனுமதி அளிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post பீகாரில் கார்கேயின் ஹெலிகாப்டரில் சோதனை: காங்கிரஸ் புகார் appeared first on Dinakaran.