கேரளாவில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல்

திருவனந்தபுரம்: பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள நிரணம் பகுதியில் கேரள அரசுக்கு சொந்தமான வாத்துப் பண்ணை உள்ளது. கடந்த சில தினங்களாக இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துகள் செத்தன. இதைத் தொடர்ந்து அவற்றின் ரத்த மாதிரி போபாலில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நோய் பாதித்த பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் வாத்துகளை கொல்வது குறித்து முடிவெடுக்கப்படும்.

The post கேரளாவில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: