காங்கிரசின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு

டெல்லி: காங்கிரசின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்; சுதந்திரப் போராட்டத்தில் இருந்து, நவீன இந்தியாவை உருவாக்க பெண்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். இருப்பினும், இன்று நமது பெண்கள் கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் கடின உழைப்புக்கும், தவத்துக்கும் நீதி கிடைக்க, காங்கிரஸ் ஒரு புரட்சிகர நடவடிக்கையை எடுத்துள்ளது.

காங்கிரஸின் ‘மகாலட்சுமி’ திட்டத்தின் கீழ், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்குவோம். எங்கள் உத்தரவாதங்கள் ஏற்கனவே கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், தகவல் அறியும் உரிமை, கல்வி உரிமை அல்லது உணவுப் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும் சரி. எங்கள் திட்டங்களின் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு காங்கிரஸ் கட்சி அதிகாரம் அளித்துள்ளது.

மஹாலக்ஷ்மி திட்டம் பெண்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய உத்தரவாதம். இந்த இக்கட்டான நேரத்தில், காங்கிரஸின் கரம் உங்களுடன் உள்ளது என்றும், இந்தக் கரம் உங்கள் நிலையை மாற்றும் என்றும் உறுதியளிக்க விரும்புகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post காங்கிரசின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு appeared first on Dinakaran.

Related Stories: