ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்ற முகுந்த் பிரதீஷ்க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து!

சென்னை: பாளையங்கோட்டையை சேர்ந்த பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 11 லட்சம் மாணவர்கள் எழுதிய இத்தேர்வில், அகில இந்திய தரவரிசையில் (300/300) முதல் இடம் பெற்ற 23 மாணவர்களுள் ஒருவராகச் சாதனைப் புரிந்துள்ள மாணவர் முகுந்த் பிரதீஷ் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக விளங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

 

The post ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்ற முகுந்த் பிரதீஷ்க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: