இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஸ்ரீஜித் கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், 20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் தற்போது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் புகார் அளிக்க முன்வரமாட்டார்கள். ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ய உள்ளோம் என்றார். இதையடுத்து, முன்னாள் மாணவி தரப்பில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்த நீதிபதி, விசாரணையை மே 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா ஜாமீன் மனு வரும் 22ல் விசாரணை appeared first on Dinakaran.