இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து, எதிர் திசையில் தீ வைத்து, சுமார் 5 மணி நேரம் போராடி காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சேதமடைந்த மரங்களின் மதிப்பு குறித்த விபரங்களை கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது. கொடைக்கானலில் வறண்ட வானிலை தொடர்வதால், அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே வனப்பகுதி அருகே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகை பிடிப்பது, சமையல் ெசய்வது உள்ளிட்ட நடவடிக்ைககளில் ஈடுபட வேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துள்ளனர்.
The post கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ appeared first on Dinakaran.