இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து தேவகோட்டை நகர் போலீசார் விசாரித்து வந்தனர். மேலும், கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது, இந்த திருட்டில் ஈடுபட்டது, தூத்துக்குடி மாவட்டம், பிரைன்டு நகர் பகுதியைச் சேர்ந்த பெத்தையா மகன் கார்த்திக், அவரது சகோதரர் வெள்ளைச்சாமி ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் பழைய சருகணி ரோட்டில் டூவீலருடன் நின்று கொண்டிருந்தபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும், இவர்கள் கன்னியாகுமரி, கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
The post தேவகோட்டையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடி சகோதரர்கள் கைது appeared first on Dinakaran.