இந்த மலர் கண்காட்சியை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். விழாவுக்கு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் எழிலன், துணை மேயர் எம்.மகேஷ்குமார், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆபூர்வா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். கிருஷ்ணகிரி, கொடைக்கானல், குமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் எடுத்துவரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. 10லட்சம் மலர்கள் இந்த கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.