சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவாளர் தங்கவேல் விரைவில் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.