ஒன்றிய அரசைக் கண்டித்து பிப்.8ல் நாடளுமன்ற வளாகத்தில் திமுக போராட்டம்: டி.ஆர்.பாலு

டெல்லி: ஒன்றிய அரசைக் கண்டித்து பிப்ரவரி 8ல் நாடளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவது தொடர்பாக ஒன்றிய அரசு பதில் அளிக்கவில்லை. பிப்ரவரி 8ம் தேதி திமுக எம்.பி.க்கள் நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ், சி.பி.ஐ. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பங்கேற்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

 

The post ஒன்றிய அரசைக் கண்டித்து பிப்.8ல் நாடளுமன்ற வளாகத்தில் திமுக போராட்டம்: டி.ஆர்.பாலு appeared first on Dinakaran.

Related Stories: