கணவர் 3வது திருமணம் செய்த நிலையில் நீங்கள் நீங்களாக இருங்கள்!: பெண்களுக்கு சானியா மிர்சா அட்வைஸ்

புதுடெல்லி:தனது கணவர் 3வது திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான பெண்களுக்கு சானியா மிர்சா சில அறிவுரைகளை வழங்கி பேட்டி அளித்துள்ளார்.இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இடையே ஏற்பட்ட திருமண முறிவு குறித்து அவ்வப்போது பரபரப்பாக பேசப்படும். இதற்கிடையே கடந்த ஜனவரி 20ம் தேதி சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில், தனது விவாகரத்து தொடர்பான அனைத்து சர்ச்சைகளில் இருந்தும் விலகியிருந்த சானியா மிர்சா, தற்போது பேட்டி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ‘திருமணமான பெண்களுக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால், நீங்கள் நீங்களாக இருங்கள், யாருக்காகவும் மாற முயற்சிக்காதீர்கள். அப்போது தான் நீங்கள் யார் என்பது தெரியும். மற்றவர்களால் நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள்’ என்று பேட்டியில் பதிலளித்துள்ளார். சானியாவின் பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

The post கணவர் 3வது திருமணம் செய்த நிலையில் நீங்கள் நீங்களாக இருங்கள்!: பெண்களுக்கு சானியா மிர்சா அட்வைஸ் appeared first on Dinakaran.

Related Stories: