அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான புரிதல் மற்றும் நட்பை ஆழப்படுத்தவும், பல்வேறு துறைகளில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் விரும்புகிறேன். எல்லைப் பிரச்னைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்றார். இந்திய தூதராக நியமிக்கப்பட்ட சூ பியூஹாங், ஏற்கனவே ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியாவுக்கான சீன தூதராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 18 மாதங்களுக்கு பின் சீன தூதர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.