பின்னர் ஒருதடவை அந்த பெண்ணிடம் நைசாக பேசி தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அதை அந்த பெண்ணுக்கே தெரியாமல் ஜித் ரகசியமாக வீடியோ எடுத்தார். பின்னர் அந்த வீடியோவை இளம்பெண்ணின் தாய்க்கு அனுப்பி வைத்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாயாரையும் மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். மேலும் பலாத்கார காட்சிகளை தன்னுடைய நண்பர்களுக்கும் ஜித் அனுப்பி வைத்துள்ளார். நாளுக்கு நாள் ஜித்தின் மிரட்டல் அதிகரித்ததை தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் தாய் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து அறிந்த அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டார். இந்த தகவல் போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்த விவரம் தெரியாமல் வெளிநாடு செல்வதற்காக ஜித் நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்றார். அவரைக் கண்டதும் ஏரூர் போலீசுக்கு விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ஜித்தை கைது செய்தனர்.
The post பெண்ணின் பலாத்கார வீடியோவை பெற்றோருக்கு அனுப்பி பணம் பறிப்பு: வக்கிர வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.