இதுகுறித்து ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 28.10.2023ல் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முருகனை விடுதலை செய்ய வேண்டும். 2018ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படை கைப்பற்றிய 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், நல்ல நிலையில் உள்ள படகுகளை மீட்க வேண்டும்.
கடலில் மூழ்கி சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை எம்பி தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றக் கோரி, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் புறக்கணிப்போம்’’ என்றனர்.
The post 23 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.