இந்நிலையில் அதே பள்ளிக்கு மேலும் 91 சென்ட் நிலத்தை ஆயி பூரணம் தானமாக வழங்கி உள்ளார். இதன் மதிப்பு ரூ.3.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.பள்ளிக்கு கட்டடம் கட்டும்போது, ‘ஜனனி நினைவு வளாகம்’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். சொத்தை மகளின் நினைவாக அரசுக்கு பத்திர பதிவு செய்து கொடுத்ததை, முறையாக முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில் ஆயி பூரணம் மற்றும் அவரின் உறவினர்கள் ஒப்படைத்தனர். மகளின் நினைவாக இரு நிலத்தையும் சேர்த்து சுமார் ரூ.10 கோடிக்கு மேல் சொத்தை பள்ளி கட்டடம் கட்டிக்கொள்ளுமாறு தானம் கொடுத்த தாய் ஆயி பூரணம் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆயி பூரணம் கூறும்போது, ‘‘பள்ளிக்கட்டிடத்திற்கு கூடுதல் இடம் அமையும் வகையிலேயே அருகில் இருந்த இந்த இடத்தையும் தந்திருக்கிறேன். என் மகள் படிக்காத படிப்பை எல்லாம் இந்த பள்ளியில் படிப்போர் பெற வேண்டும்’’ என்றார்.
The post ரூ.7 கோடி சொத்தை கல்வி சேவைக்கு வழங்கிய நிலையில் மேலும் ரூ.3.5 கோடி நிலத்தை பள்ளிக்கு வழங்கிய ஆயி பூரணம் appeared first on Dinakaran.