பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கொங்கு மண்டலத்தில் புற்றுநோய் தாக்கத்தை குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும். தமிழ்நாடு கவர்னரின் நடவடிக்கையால் தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் வீணாகி வருகின்றது. பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாததால் செனட் கூட்டம் நடத்த முடியாத நிலை உள்ளது. இவ்வாறு பேசினார். மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நாமக்கல் எம்பி சின்ராஜ், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கொங்கு மண்டலத்தில் ஜவுளித்தொழில் நலிவடைய ஒன்றிய அரசே காரணம்: மாநாட்டில் ஈஸ்வரன் எம்எல்ஏ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.