ஆவடி: ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பருத்திப்பட்டு வேலம்மாள் பள்ளி அருகே காலி இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று குப்பைகளை மர்ம நபர்கள் தீயிட்டு சென்றதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாமல் பயத்துடன் வாகனத்தை ஓட்டி சென்றனர். அப்பகுதி மக்கள் உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
