இதில், இருவாகனங்களும் இடிபாடுகளில் சிக்கியது. இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் இருந்த மற்ற 2 பேரும், லோடு ஆட்டோ ஓட்டி வந்த கௌதம்கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயத்துடன் கிடந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உமாமகேஸ்வரியை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிவித்தனர். மேலும், பிரவீன் சுந்தர், கௌதம்கார்த்திக் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுக்கோட்டை அருகே கார்-லோடு ஆட்டோ மோதி தம்பதி பரிதாப பலி appeared first on Dinakaran.