பாடிய நல்லூரில் அங்கன்வாடி மையம் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

புழல்: பாடிய நல்லூரில், ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது. இதில், எம்எல்ஏ சுதர்சனம் பங்கேற்றார், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அரசு நடுநிலை பள்ளியில் கூடுதலாக நான்கு வகுப்பறை கட்டிடங்கள் ரூபாய் 56 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்டது இதன் திறப்பு விழாவிற்கு நேற்று சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு துணைத் தலைவருமான கருணாகரன் தலைமை தாங்கினார்.

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு கட்டி முடிக்கப்பட்ட நான்கு வகுப்பறைகள் மற்றும் ரூ.12 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி ஒன்றிய கவுன்சிலர் மாலதி மகேந்திரன், ஊராட்சி திமுக செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

The post பாடிய நல்லூரில் அங்கன்வாடி மையம் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: