இதனால் ஆத்திரமடைந்த மல்லிகார்ஜுனா ‘என்னிடம் உள்ளது பொம்மை துப்பாக்கி இல்லை’ என்று ஆவேசத்துடன் கூறியபடி தரையை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். இதனால் பாரில் இருந்தவர்கள் அனைவரும் பயந்து வெளியே ஓடினர். இதனையடுத்து மல்லிகார்ஜூனாவும் அங்கிருந்து சென்றுவிட்டார்.இதுகுறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சித்தூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பாரில் துப்பாக்கி தோட்டா பட்டதில் சேதம் அடைந்த இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மல்லிகார்ஜுனாவை நேற்று கைது செய்தனர்.
The post பொம்மை துப்பாக்கி என்றதால் ஆத்திரம் பாரில் துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் கைது appeared first on Dinakaran.