மதுபானக் கொள்கை வழக்கில் ஜாமீன் கேட்டு கவிதா மனு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சி தலைவருமான கவிதாவை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 15ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைத்தது. அவரது நீதிமன்ற காவல் வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை கடந்த மாதம் 8ம் தேதி தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கவிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ன காந்தா சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

The post மதுபானக் கொள்கை வழக்கில் ஜாமீன் கேட்டு கவிதா மனு appeared first on Dinakaran.

Related Stories: