மேலும் பாலியல் வீடியோவில் இடம்பெற்றிருந்த பெண்ணின் மகன் தனது தாயை துன்புறுத்தி பலாத்காரம் செய்ததாகவும், கடத்தி சென்று மிரட்டுவதாகவும் புகார் அளித்தை தொடர்ந்து எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது மஜத பெண் நிர்வாகி துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் என்று அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது மூன்றாவதாக ஒரு பெண் மே 8ம் தேதி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அவர் மீது எஸ்ஐடி போலீசார் மூன்றாவது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரஜ்வல் மீது 3வது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.