இதை தொடர்ந்து தொழிற்சங்கத்துக்கு நிர்வாகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஒரு பிரிவினர் நேற்றுமுன்தினம் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று ஊழியர்கள் பற்றாக்குறையால் நேற்று 75 விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ரத்து செய்தது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ செவ்வாய்கிழமையில் இருந்து இதுவரை 260 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ.30 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.நாளை முதல் வழக்கம் போல் விமான சேவை நடைபெறும்’’ என்றார்.
The post ஊழியர்கள் பற்றாக்குறை ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 75 விமானங்கள் ரத்து: நாளை முதல் வழக்கம் போல் விமானங்கள் இயங்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.