இந்நிலையில் ஆயுதப்படைக்கு சொந்தமான போலீஸ் வேனை லோகநாதன் நேற்று இரவு ஓட்டிச்சென்றார். சீலைப்பிள்ளையார்புத்தூர் பேருந்து நிலையம் அருகே சென்றபோது அங்கிருந்த அறிவழகன் என்பவரது வீட்டு முன்கூரையில் மோதியதோடு எதிரே வந்த டூவீலர் மீதும் வேன் மோதியது. இதில் டூவீலரை ஓட்டிவந்த தீனதயாளன்(48), மருதாயி(38) மற்றும் அப்பகுதியில் நின்ற தீபன்(36) ஆகிய 3 பேரும் போலீஸ் வேனின் அடியில் சிக்கிக்கொண்டனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் வேனை சாய்த்து அடியில் சிக்கி இருந்த மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழியில் மருதாயி இறந்தார். காயமடைந்த 2பேரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸ் வேன் மோதி பெண் இறந்ததால் அங்கு பதட்டம் அதிகரித்தது. இதையடுத்து திருச்சி டிஐஜி மனோகரன், எஸ்பி அருண்குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் உள்பட நூற்றுக்கணக்கான போலீசார் நேற்று இரவு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post தாறுமாறாக ஓடிய போலீஸ் வேன் மோதி பெண் பரிதாப பலி: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.