இதில் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதன் பிறகு தான் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் ஏதேனும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதா என தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நேற்று அளித்த விளக்கத்தில், ‘அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என சென்னையில் உள்ள எங்கள் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அவர்கள் கேட்ட ஆவணங்களை ஒப்படைத்துள்ளோம். இதனால் எங்கள் நிறுவனத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாங்கள் கருதவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக இந்தியா சிமென்ட்ஸ் ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல் appeared first on Dinakaran.