இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினர் பெரிந்தல்மண்ணா போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பெரிந்தல்மண்ணா போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தந்தைக்கு 150 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அபராதத் தொகையில் ரூ.2 லட்சத்தை சிறுமிக்கு கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post கேரளாவில் 15 வயது மகள் பலாத்காரம் தந்தைக்கு 150 ஆண்டு சிறை appeared first on Dinakaran.