மஞ்சு விரட்டில் காளை முட்டி முதியவர் சாவு

மேலூர்: மேலூர் அருகே மஞ்சுவிரட்டை பார்க்க வந்தவர் காளை மாடு முட்டியதில் முதியவர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மதுரை மட்டுமல்லாது, சிவகங்கை, ராமநாதபுரத்தை சேர்ந்த காளைகள் களமிறங்கின. மாடுபிடி வீரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டை பார்க்க வந்த மேலூர் அருகே வெள்ளலூரை சேர்ந்த சந்திரன்(60) காளை முட்டியதில் படுகாயமடைந்தார். மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post மஞ்சு விரட்டில் காளை முட்டி முதியவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: