தமிழ்நாடு அரசுடன் BIG TECH நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையுடன் BIG TECH நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. காஞ்சிபுரம் பிள்ளைபாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் ஆலை நிறுவ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிள்ளைபாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1003 கோடியில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.1003 கோடி முதலீட்டில் அமையும் தொழிற்சாலை மூலம் 840 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

The post தமிழ்நாடு அரசுடன் BIG TECH நிறுவனம் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: