கலெக்டர் வழங்கினார் மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்

கோவை, ஜன.21: கோவை மருதமலை முருகன் கோயிலில் நடைபெற உள்ள தைப்பூசத்திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் கோயில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கிய தைப்பூசத் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் வரும் 24ம் தேதி திருக்கல்யாண உற்சவ நிகழ்வும், வரும் 25ம் தேதி, திருத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இக்கோயிலுக்கு பல லட்சம் பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்கள் மூலமாகவும் வருவார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு போதுமான குடிநீர் வசதி, மலை அடிவார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தற்காலிக கழிவறை வசதி, 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலெக்டர் வழங்கினார் மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.