இந்த புத்தக காட்சியில் தினகரன்- சூரியன் பதிப்பகத்தின் புத்தக அரங்கு எப் 29 என்ற எண்ணில் அமைந்துள்ளது. இந்த அரங்கில் மாணவர்களின் நலனுக்காக வெளியிடும் வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு அடங்கிய புத்தகம், போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் புத்தகம் போன்ற பல்வேறு புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் திரளாக தினகரன் ஸ்டாலில் குவிந்து புத்தகங்களை வாங்கிச்சென்று வருகின்றனர். மேலும் 164சி அரங்கில் தினகரன் நாளிதழின் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் குங்குமம், தோழி, டாக்டர் மற்றும் தினகரன் ஆன்மிகம், விவசாயம், கிச்சன் ஆகிய இதழ்களும் பார்வைக்கு உள்ளன.
The post 47வது சென்னை புத்தக காட்சி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: புத்தகங்கள் வாங்க குவிந்த வாசகர்கள் appeared first on Dinakaran.