அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், திருச்சி, மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவையில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்ப நிலை நேற்று இருந்தது. நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி வரையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தென் இந்தியப் பகுதிகளில் இருந்து 15ம் தேதி நிறைவடைவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், தற்போது கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
The post வரும் 15ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறுகிறது: வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.