அங்கே 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அங்கே 2 மணி நேரம் சிகிச்சை அளித்த பின்னர் மாணவனை அவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கே மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியான நிலையில் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று விடியற்காலை கோபிநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். மாணவன் உயிரிழந்ததை தொடர்ந்து ஊராட்சி சார்பில் அப்பகுதியில் சுகாதார பணியாளர்கள் துய்மை பணிகள் மேற்கொண்டனர். பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
The post வாணியம்பாடி அருகே 8-ம் வகுப்பு மாணவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு! appeared first on Dinakaran.