கடந்த ஆண்டு 5.37 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நடந்த ஏற்றுமதியில், இந்த ஆண்டு 5.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை ஏற்கனவே கடந்துவிட்டோம். எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு, இந்திய ஏற்றுமதியில் 30% பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் 70% எலக்ட்ரிக் 2 சக்கர வாகனங்கள் மற்றும் 40% எலக்ட்ரிக் 4 சக்கர வாகனங்கள், தமிழ்நாட்டில் தயாரானவையாகும். தோல் இல்லாத காலணி உற்பத்தி பிரிவிலும் உலக அளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இந்தியாவிலேயே அதிக நகரமயமாதல் நடைபெறும் தமிழ்நாடு, பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக திகழ்வது பெருமைக்குரியது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்தியாவின் முன்னணிப் பட்டியலில் உள்ள 100 கல்லூரிகளில் 22 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பதிவு செய்யும் பொறியாளர்களின் எண்ணிக்கை 1.50 லட்சமாக உள்ளது. 250 பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதாச்சாரம் இங்குள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
The post இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.