மற்ற 3 மாவட்டங்களிலும் நகர கூட்டுறவு வங்கிகள் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் முகாம் நடைபெறுகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன்தொகை ரூ.10,000 வரை வழங்கப்படும். கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் ரூ.200 என்ற அடிப்படையில் ஓராண்டுக்குள் உரிய வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். அல்லது. மாதந்தோறும் ரூ.1,000 வீதம் உரிய வட்டியுடனும் கடனை திருப்பிச் செலுத்தலாம். சென்னையில் 7 இடங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் 12 இடங்களிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.
கூட்டுறவுத்துறையின் இணையவழி விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து தெரு வியாபாரிகள் கடன் பெறலாம். சிறு வணிகர்கள், தெருவோர வியாபாரிகள், காய்கறி, பூ, பழ வியாபாரிகளும் கடன் பெற தகுதியானவர்கள். கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரும் கடன் பெறலாம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மிக்ஜாம் புயலால் பாதித்த 4 மாவட்டங்களில் சிறுவணிகர்களுக்கு ரூ.10,000 வரை கடன்… இன்று முதல் முகாம்கள் தொடக்கம்!! appeared first on Dinakaran.