மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

சேலம், ஜன. 3:சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் மாற்றுத்தினாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் மார்பளவு புகைப்படத்துடன் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பயனடையலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் 11-ல் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0427-2415242 மற்றும் 94999-33489 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: