இந்நிலையில் டெல்லியில் காங்கிரசின் முன்னாள் படைவீரர் துறைத்தலைவர் ஓய்வு பெற்ற கர்னல் ரோஹித் சவுத்ரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் முன்பே 2019-22ம் ஆண்டுக்குள் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் சேர பல்வேறு நடைமுறைகள் முடிந்து 1.5 லட்சம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அக்னிபாத் திட்டம் காரணமாக அவர்களின் ராணுவ கனவு சிதைந்து விட்டது. அவர்கள் அனைவரும் உடனே பணியில் சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்னிபாத் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு மிகவும் ஆபத்தானது. மேலும் அக்னிபாத் திட்டத்தில் சேர பல்வேறு ஆள்சேர்ப்பு மையங்கள் மூலமாக ரூ.100 கோடிக்கு மேல் ஒன்றிய அரசு வசூலித்துள்ளது. அதுகுறித்த கணக்கை அரசு வௌியிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
The post நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு மிகவும் ஆபத்தானது அக்னிபாத் திட்டத்தில் சேர ரூ.100 கோடிக்கு மேல் வசூல்: காங். கடும் தாக்குதல் appeared first on Dinakaran.