முதன்முறையாக 2019ல் மீனவர்களுக்கு தனித்துறை ஆரம்பித்து 38500 கோடி துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இறால் ஏற்றுமதியில் நாம் முதல் இடத்தில் உள்ளோம். கடல்சார் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 4ம் இடத்திலும் உள்ளோம். நாளை பிரதமர் மோடி, திருச்சிக்கு வந்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ் மக்கள், பண்பாடு, கலாச்சாரம் மீது அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்.
அதனால் தான் நேற்று காசி தமிழ் சங்கம் நடத்தி அது நேற்று நிறைவு பெற்றிருக்கிறது. எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட அமோனியா கசிவு தொடர்பாக சமந்தப்பட்ட நிறுவனம் மற்றும் தமிழக அரசிடம் அறிக்கை மூலம் தெரிந்த பிறகு தான் அது குறித்து முடிவு எடுக்கப்படும். மீனவத்துறையும் முன்னேற வேண்டும், தொழிற்துறையும் முன்னேற வேண்டும். அப்போது தான் தேசம் மிக பெரிய வளர்ச்சி அடையும். சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்துறைகளை நிறுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post எண்ணூர் பகுதியில் அமோனியா கசிவு; தமிழக அரசிடம் அறிக்கை பெற்ற பின் முடிவு: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.