ஒன்றிய அரசுடன் உல்பா அமைதி ஒப்பந்தம்

புதுடெல்லி: அசாமில் செயல்பட்டு வந்த உல்பா தீவிரவாத அமைப்புக்கு கடந்த 1990ல் ஒன்றிய அரசு தடை விதித்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அரபிந்தா ராஜ்கோவா தலைமையிலான உல்பா அமைப்பு மற்றும் ஒன்றிய அரசுக்கு இடையே நி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதனை தொடர்ந்து நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் உல்பா அமைப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் அசாமில் நீடித்து வந்த கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசுடன் உல்பா அமைதி ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: