வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதே போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இதே நிலை தொடரக்கூடாது. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளார் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்து ஓராண்டாகியும் தற்போது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
எனவே, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி வேங்கைவயல் கொடுஞ்செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.
The post கொடூரத்தின் ஓராண்டு நிறைவு வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது வேதனை: அன்புமணி, டிடிவி அறிக்கை appeared first on Dinakaran.