இதில் ரவுடி மந்திரமூர்த்தி (35) சிறையில் இருந்தபடி ஜெகன் கொலை வழக்கு சம்பந்தமாக பணம் உதவி செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த கொலை வழக்கு சம்பந்தமாக 3வது குற்றவாளியாக ரவுடி மந்திரமூர்த்தியை சேர்த்தனர்.மேலும், ஜெகன் கொலை வழக்கில் 4வது குற்றவாளியாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவர் சீனிவாசன் (25) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ரவுடி மாரி என்பவர், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்வதற்கு 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று ஆந்திரா எல்லையில் பிரபல ரவுடி மாரி (26) பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல்கிடைத்தது, அதன்பேரில், திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலை அங்கு விரைந்தனர். அங்கு, போலீசாரை பார்த்ததும் மாரி தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், அவரை நொளம்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி மாரி மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி, கஞ்சா, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post அமமுக பிரமுகர் கொலை வழக்கில் ஆந்திர எல்லையில் பதுங்கி இருந்த ரவுடி துப்பாக்கி முனையில் கைது appeared first on Dinakaran.